:

ராஜ்யசபா ஆசைகாட்டி கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கிறதா அதிமுக?

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பு அடைந்து வருகின்றன. திமுக கூட்டணி பழைய பலத்துடன் வலுவாக இருக்கும் நிலையில், கல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தங்களோடு சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே இப்போது பாஜக அணியில் இருக்கிறது. கடந்த முறை அந்தக் கட்சிக்கு வழங்கிய ஒரு இடத்தை இம்முறை கமலுக்கு ஒதுக்கும் திட்டத்தில் இருக்கிறது திமுக.
திமுக கூட்டணி எக்ஸ்ட்ரா பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர் முகாமான அதிமுக அணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறு கட்சிகள் மட்டுமே தற்போதுவரை இணைந்துள்ளன. பெரிய கட்சிகள் எதுவும் இன்னும் அந்தப்பக்கம் திரும்பவில்லை. அதனால் தனது பழைய சகாக்களான பாமகவையும் தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்கும் உத்திகளை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது அதிமுக.  கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளைக் கேட்டு பிறகு 23 தொகுதிகளுக்கும் கைவிரித்துவிட்டது அதிமுக.  இந்தக் கசப்பான அனுபவத்தால்  இம்முறை அதிமுகவை கண்டுகொள்ளாமல் பாஜக பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது தேமுதிக.  பிரேமலதாவிற்கு பாஜக சார்பில் ராஜ்யசபா சீட்டு உட்பட நிறைய சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு பிரேமலதா கேட்கும் உத்திரவாதத்தை அளித்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகச் சொல்கிறது அதிமுக.  தேமுதிகவை போலவே பாமகவும் ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுகவிடம் அடிப்போட்டிருக்கிறது.  இதுகுறித்து அதிமுக முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி கொடுத்து அவர்களை கூட்டணிக்கு அழைப்பதாக சொல்வது அனுமானமான கேள்வி. அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
  

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *