திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் அதிரடி பேச்சு..!
- Reporter 12
- 26 Feb, 2024
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டமானது, புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், கட்சிக்காரனுக்கு "மதிப்பும், மரியாதையும்" கொடுங்கள். அவன் "உழைப்பால் தான்" இன்று நீங்கள் எம்.எல்.ஏ-வாகவும், எம்.பி- யாகவும், கவுன்சிலராகவும் உள்ளீர்கள். கட்சிக்காரன் 'உதவி' இல்லையெனில், நீங்கள் இல்லை. அவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது "மரியாதை" மட்டும் தான். திமுக கட்சிக்காரன் "சுயமரியாதையும், கெளரவமும்" கொண்டவன். ஆகையால், தயவுசெய்து கட்சிக்காரனை "மதிப்புடன்" நடத்துங்கள் என்றார். இந்த "அதிரடியான" பேச்சு, திமுக தொண்டர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *