:

தமிழ்நாட்டிற்கு அநீதி! ஜெகன்மோகன்!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு நதி, கர்நாடகம் மற்றும் ஆந்திராவை கடந்து தமிழ்நாட்டில் 222 கிமீ பயணிக்கிறது. ஆந்திரா அரசு, மாநில ஒப்பந்தங்களை மீறி ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியிருக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்போது ஆந்திரா அரசு குப்பம் தொகுதியில் உள்ள ரெட்டி குப்பத்தில் புதிய தடுப்பணையை கட்ட திட்டமிட்டு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழ்நாடு விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உள்ள பாலாறு நதி தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்தி உரிய தடை உத்தரவை பெற வேண்டும் என்று பாலாறு நதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *