:

காங்கிரசை கழட்டிவிடும் திமுக!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

          2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக 9 தொகுதிகள் மட்டுமே தரப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் தேவைப்பட்டால் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடுவோம் எனக் கூறியிருந்தார்.
         இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக அதிமுக மூத்த  நிர்வாகிகளிடம் காங்கிரசை அதிமுக பக்கம் கொண்டு வருமாறு பேசி இருக்கிறாராம். சமீபத்தில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகை செல்வன் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உள்ள கசப்பு வெளிப்பட்டிருக்கிறது. அந்த கசப்புக்கு மருந்து அதிமுகவிடம் உள்ளது என்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று கூறினார்.
          இவையெல்லாம் எடப்பாடி அவர்கள் காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்து பிரித்து அதிமுகவுடன் இணைக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *