எஸ்பிஐ வங்கிக்கு பிடிஆர் விட்ட டோஸ்!

- Reporter 12
- 06 Mar, 2024
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "தேர்தல் பத்திரங்கள் திட்டம்" மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டமானது தங்களது நிறுவனங்களின் அடையாளங்கள் வெளியே தெரியாமலேயே அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் ஆகும். ரூபாய் ஆயிரம் முதல் ஒரு கோடி வரையிலான இந்த பத்திரங்களை பெறும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்குகளை விசாரித்ததில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் கொடுத்தவர்கள் விவரங்களை எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு எஸ்பிஐ ஜூன் 30 வரை அவகாசம் கோரியுள்ளது.
இதை பிடிஆர் அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் கூறுகையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு எஸ்பிஐ 4 மாத கால அவகாசம் கோரியுள்ளது மிகவும் கேவலமானது. பட்டியலை நாளைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், அதனை வழங்கும் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ இவ்வாறு கேவலமாக அவகாசம் கேட்பது மிகவும் கண்டனத்துக்குரியது என பிடிஆர் அவர்கள் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *