மம்தா சவால்! அபிஜித் ராஜினாமா!

- Reporter 12
- 06 Mar, 2024
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் நடைபெறும்
ஆட்சியில், அவரது கட்சி பிரமுகர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தார். இதில் கொதித்தெழுந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயை
பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்து எதிர்க்கலாம், என்ற வகையில் சவால் விடுத்து வந்தனர். சவாலை ஏற்று தான் வகித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பை அபிஜித் கங்கோபாத்யாய் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து பத்திரிகையாளர்கள்
சந்திப்பின் பொது அநேகமாக மார்ச் 7ம் தேதி பாஜகவில் இணைவேன் என்றும், திரிணாமுல் கட்சியை ஒரு அரசியல் கட்சியாக நான் கருதவில்லை'' ஒரு தவறு செய்யும் கும்பல் என்று நான் நினைக்கிறேன்
என்றும் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *