:

ஆளுநர் தமிழிசை ராஜினாமா!!!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

          கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கு பாஜக மேல் இடம் 2019 செப்டம்பரில் தெலுங்கானா ஆளுநராகவும், 2021 பிப்ரவரியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.  தான் ஏற்ற பதவியை துடிப்புடனும் செம்மையாகவும் பணியாற்றி வந்த நிலையில் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

          பிரதமர் மோடி அவர்கள் வற்புறுத்தல் காரணமாகவே ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தமிழிசை அவர்கள் மீண்டும்  கட்சி பணியாற்றவும், வரும் லோக்சபா தேர்தலில் தமிழ் நாட்டில் தென் சென்னை அல்லது நெல்லை தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *