நிஜ குத்துச்சண்டைக்கு தயாராகும் சீமான்!!!

- Reporter 21
- 09 Nov, 2023
கடந்த
சில நாட்களாகவே நடிகை விஜயலக்ஷ்மி, வீரலட்சுமி மற்றும் சீமான் என மூவருக்கும் நடந்த
வந்த வாய்ச்சண்டை தற்போது வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசனும் சேர்ந்து குத்துசண்டையாக
மாறவிருக்கிறது.
திருமதி
வீரலட்சுமி அவர்கள் கூறுகையில் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் ஒழுங்கினமாக
பேசியதாகவும், ஒரு பெண்ணாக தான் வேண்டும் என்றால் இதையெல்லாம் கடந்து செல்லலாம், ஆனால்
என் கணவர் கடந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் உங்களை தொடர்பு கொண்டு குத்து
சண்டைக்கு அழைத்தார்.
ஆனால்
என் கணவரிடம் பேச தைரியம் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள்
மத்தியில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். பாக்ஸிங் நடைபெறும் இடம் திருவள்ளூர்
மாவட்டத்தில் தேர்வு செய்யபட்டுள்ளது. போட்டி வரும் 2024 தை மாதம் காணும் பொங்கல் அன்று
நடைபெறும்.
பந்தயம்
என்னவென்று போட்டி நடைபெறும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க படும். வந்து கலந்து
கொள்ளுங்கள் என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *