:

குஜராத்தில் பாலம் உடைந்து விபத்து! நால்வர் கதி என்ன?

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

குஜராத் மாநிலம் சுரேந்தரநகர் மாவட்டத்தில், வஸ்தாதி என்ற இடத்தில் உள்ள பழமையான பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது அந்த வழியாக சென்ற குப்பை லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இதை சற்றும் எதிர்பாரத அப்பகுதி மக்கள் விரைந்து படகு மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முன்வந்தனர்.

அதே வேலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், மீட்புப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  விபத்தில் 10 பேர் சிக்கிய நிலையில் 6 பேர் மீட்கப்பட்டனர். 4 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த பாலம் 40 ஆண்டு கால பழமையான பாலம் என்பதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க பட்டிருந்தது. அதை பொருட் படுத்தாமல் குப்பை லாரி சென்றதால் இந்த விபத்து எற்பட்டதாக கூறப்படுகிறது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *