காவேரி நீர் விவகாரம்: தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடகாவில் பந்த்!!!

- Repoter 11
- 09 Nov, 2023
தமிழ்நாட்டிற்கு காவேரிலிருந்து 5000 கன அடி நீரை
திறந்து விட காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு சிறிதளவே
நீரை திறந்து விடுகிறது. கர்நாடகாவில் உள்ள
விவசாயிகள்,சில கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில்
26/09/2023 அன்று பெங்களூருவில் பந்த் நடத்த கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள்
ஆதரவு தெரிவித்துள்ளன. சில ஐடி நிறுவனங்களும் மூடப்படும் என அறிவித்துள்ளனர். இதனால்
பெங்களூருவில் தமிழர் வாழும் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே
29ஆம் தேதி கர்நாடகாவில் முழு பந்த் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *