கடத்தப்பட்ட மாணவர்கள் படுகொலை! மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!

- Reporter 12
- 09 Nov, 2023
மணிப்பூரில் மைத்தேயி இன மாணவர்கள் கடத்தப்பட்டு
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அம் மாநிலம் மீண்டும் பற்றி இருக்கிறது. இதனை அடுத்து இரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட இணையதள சேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் வெடித்த போராட்டம் பல மாதங்களாக நீடித்து வந்த நிலையில் சுமார் 200க்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்த நிலையில் எண்ணிலடங்கா
மக்கள் வாழ்விடங்கள் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட்டத்தின் பெயரில் சிபிஐ குழு விசாரணை
நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடத்தப்பட்ட இரு மாணவர்கள் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட
காரணத்தினால் மீண்டும் மணிப்பூரில் போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள்
ஒன்று திரண்டு முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டனர் போராட்டம் இரவிலும் தொடர்கிறது.
கடந்த சில மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதள சேவை இரு தினங்களுக்கு முன்னதாக
மீண்டும் வழங்கப்பட்டது. தற்போது நடைபெறும்
போராட்டத்தின் காரணமாக மீண்டும் இணையதள சேவை முடக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *