பாஜகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

- Reporter 12
- 29 Jan, 2024
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன. மத்தியில் பாஜக அரசினை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து :இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி பல கூட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா கூட்டணியை உருவாக்கிய நித்திஷ் குமார் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் இணைந்து விட்டார். மத்தியில் இவ்வாறு என்றால், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. முந்தைய தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இருக்கும் கட்சிகள் அப்படியே இருக்கின்றன. தற்போது அதிமுக, பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதற்கான பல ஆலோசனைக் கூட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் பேட்டியின்போது பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணியே கிடையாது என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மக்களை குழப்பி தமிழகத்தில் காலூன்ற நினைப்பது நடக்காது என்றும், இந்தியா கூட்டணி உடைவது போல தமிழகத்தில் திமுக கூட்டணியும் உடையும் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *