அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கைது!

- Reporter 12
- 30 Jan, 2024
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 150 மேற்பட்ட அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *