:

வானதி சீனிவாசனுக்கு சவால் விட்ட சேகர் பாபு!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாஜக புதிய கூட்டணியை உருவாக்க உள்ளதாக தெரிகிறது. அந்த கூட்டணிக்காக ரஜினி, கமல், விஜய் அவர்களிடம் ஆதரவு கேட்போம் என கோவை தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.         இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்று பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் பாஜக யாருடைய தோலில் சவாரி செய்து வந்தாலும் அல்லது பாஜக தோள் மீது யாரை தூக்கி வந்தாலும், திடமான தோள்களை கொண்ட எங்கள் தளபதியார் இருக்கும் வரை அது நடக்காது என்று கூறினார். மேலும் திராவிட மண்ணான தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பலனடைந்த மக்கள் வரும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் பரிசாக வழங்குவார்கள். வானதி சீனிவாசன் அவர்கள் வேண்டுமானால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு  வெல்லட்டும். அதன் பிறகு நாங்கள்  ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று சவால் விட்டார் திரு சேகர் பாபு அவர்கள்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *