அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல்!

- Reporter 12
- 30 Jan, 2024
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் கடந்த 26 ஆம் தேதி அதிகாலை சின்னப்பன் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சின்னப்பன் மற்றும் அவரது மனைவி மருமகள் பேரன் மற்றும் பேத்தி ஆகியோரை கொடூரமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் இவர்கள் மதுரையில் வேலம்மாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, இதுவரை ஆன நான்கு லட்சம் ரூபாயையும் மருத்துவமனையில் கட்டிவிட்டு கையில் கவர்ல போட்டு ஒரு இலட்சம் பணத்தையும் கொடுத்து இனி வரும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும், வேறு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் சொல்லி வந்துள்ளார்.
வேலை பளுவினால் அமைச்சர் வர சற்று தாமதமானதால் இதில் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய முயன்ற பலரின் வாயை ஒரே நாளில் அடைத்தது மட்டுமல்லாமல் நாங்கள் எல்லாம் நினைத்து பார்க்காத பெரும் உதவியை அமைச்சர் பெருமகனார் செய்து கொடுத்து ஆறுதல் சொல்லி சென்றது அந்த குடும்பத்தினருக்கு இது பெரும் மன வலிமையையும் ஆறுதலையும் தந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *