:

சவுக்கு சங்கர் விரைவில் கைது?

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

பிரபல அரசியல் விமர்சகர் ஆன youtube சவுக்கு சங்கர் அவர்கள் பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டியளிக்கின்றார். அந்தப் பேட்டிகளில் தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்தும், முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.      தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்க சவுக்கு சங்கர் அவர்கள் தனது குழுவுடன் சென்றிருந்தார் அங்கு போலீஸாருக்கும், சவுக்கு சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு போராட்டத்தில் பங்கு பெற்றார். இந்த நிலையில் காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமினில் வெளிவர முடியாத கொலை மிரட்டல் பிரிவு. இதனால் சவுக்கு சங்கர் அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என கேள்வி எழுந்துள்ளது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *