:

பாஜக அமர் பிரசாத் ரெட்டி கைதாகிறாரா?

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஆட்களை அழைத்து வர கோட்டூர்புரத்தை சேர்ந்த ஆண்டாள் என்பவருக்கு ரூபாய் 50,000 கொடுத்ததாகவும், இதில் ஆட்களை அழைத்து வரும் விவகாரத்தில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதாவுக்கும், ஆண்டாளுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் 21 ஆம் தேதி இரவு அமர் பிரசாத் கார் ஓட்டுநர் மற்றும் நிவேதா ஆகியோர் ஆண்டாளின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஆண்டாளும் அவரது சகோதரி தேவியும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட இருவரும் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோர்ட்டுபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அமர் பிரசாத், ஸ்ரீதர் உள்ளிட்டார் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை தேடி வரும் நிலையில் அவரைத் தேடி மும்பை மற்றும் குஜராத் மாநிலத்திற்கு தனிப்படை  போலீசார் சென்றுள்ளனர். 

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *