:

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகளின் அவல நிலை

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

கடந்த மாதம் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகையாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அங்கிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *