:

ஆம் ஆத்மி கட்சியை பாஜகவில் இணைக்க முயற்சி! டெல்லி முதல்வர் குற்றச்சாட்டு.

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய அர்விந்த் கெஜ்ரிவால், உடனடியாக டெல்லியில் ஆட்சியைப் பிடித்து அசத்தினார். தொடர்ந்து பஞ்சாபிலும் தனது கட்சி ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்தார்.   தற்போது எதிர்க்கட்சிகளின் புதிய அமைப்பான, 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் இவர், பா.ஜ.கவை தொடர்ந்து கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருகிறார்.  டெல்லியில் ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க ஏழு  பேரிடம் தலா இருபத்தைந்து கோடி ரூபாய் பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்தச் சூழலில், தன்னை பா.ஜ.கவில் இணையக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கெஜ்ரிவால். 

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *